fbpx

முதலீடுகளை ஈர்க்க சென்ற முதல்வர் ஸ்டாலின் சென்னை வந்தடைந்தார்..!! அமைச்சர்கள், நிர்வாகிகள் வரவேற்பு..!!

பல்வேறு தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதற்காக முதலமைச்சர் முக.ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டுக்கு சென்றிருந்தார். கடந்த மாதம் ஜனவரி 27ஆம் தேதி ஸ்பெயினுக்கு புறப்பட்டுச் சென்ற அவர், அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான மிகவும் சாதகமான சூழ்நிலைகளைப் பற்றி அவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார். அதன் மூலம் சில நிறுவனங்கள், தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. இந்நிலையில், ஸ்பெயின் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு இன்று சென்னை வந்தடைந்தார் முதலமைசர் முக.ஸ்டாலின். அவரை அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்றனர்.

Chella

Next Post

பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 7,50,521 பயனாளிகளுக்கு வீடுகள்...!

Wed Feb 7 , 2024
பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2020-21-ம் ஆண்டு முதல் கடந்த 3-ம் தேதி வரை 7,50,521 பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. மக்களவையில் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய கிராம வளர்ச்சித்துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்; கிராமப்புறங்களில் அனைவருக்கும் வீட்டுவசதி என்ற நோக்கத்தில் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டம் கடந்த 2016 ஏப்ரல் 9-ம் தேதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2024 மார்ச் […]

You May Like