fbpx

எல்லை மீறிய ‘மிக்ஜாம்’ புயல்..!! திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்..!!

திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் அதி தீவிர புயலாக உருவாகியதை தொடர்ந்து, கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில், இன்றைய தினம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. நேற்றைய தினம் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்றைய தினம் சென்னைக்கு ஆரஞ்ச் அலெர்ட்டும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலெட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மிக்ஜாம் புயலினுடைய தாக்கம் சென்னை விட திருவள்ளூர் மாவட்டத்திற்கு சற்று அதிகமாகவே காணப்படும். இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் 21 செண்டி மீட்டருக்கு மேல் மழை பதிவாவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

தலைகீழாக மாறிய மிசோரம் தேர்தல் முடிவுகள்..!! தனி பெருபான்மையுடன் ஆட்சியை பிடித்த ஜோரம் மக்கள் இயக்கம்..!! !!

Mon Dec 4 , 2023
நவம்பர் மாதம் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், நேற்று வெளியான முடிவுகளில் சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக அமோக வெற்றியை பெற்றுள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இன்று மிசோரம் மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சிறிய மாநிலமான மிசோரத்தில் மொத்தம் 40 தொகுதிகளே உள்ளன. அங்கு மெஜாரிட்டிக்கு 21 இடங்கள் […]

You May Like