fbpx

முக்கிய உத்தரவு…! கடைகளில் இதற்கெல்லாம் இனி தடை…! மீறினால் சட்டப்படி நடவடிக்கை என அறிவிப்பு…!

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில்; கஞ்சா, குட்கா மற்றும் புகையிலைப் போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை சேமித்து வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்யும் கடைகளின் மீது சென்னை மாநகர முனிசிபல் சட்டம் 1919, பிரிவு 379A(1)ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கடந்த 2021 ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் முதல் 14ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிலோ கிராம் கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் துறையின் மூலம் விற்பனை செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னைப் பெருநகர காவல் ஆணையாளர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், 126 கடைகள் மாநகராட்சி அலுவலர்களால் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. வணிக கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, கஞ்சா மற்றும் புகையிலைப்பொருட்களை எக்காரணம் கொண்டும் சேமித்து வைக்கவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது. மீறினால் காவல் துறையுடன் இணைந்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

வாகன ஓட்டிகளே...! இந்த தேதி வரை யாருக்கும் அபராதம் விதிக்க கூடாது...! வெளியான புதிய அறிவிப்பு

Sat Oct 22 , 2022
அக்டோபர் 21 முதல் அக்டோபர் 27 வரை மாநிலத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று குஜராத் அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி இந்த அறிவிப்பை வெளியிட்டார். வட இந்தியாவில் பெரும்பாலும் ஒரு வாரம் கொண்டாடப்படும். இந்த தீபாவளி நாட்களில் இந்த நடவடிக்கை வருகிறது என்பதால் ஒரு வாரத்திற்கு அபராதம் விதிக்கப்படாது. போக்குவரத்து விதிகளை மக்கள் கவனத்தில் கொள்ளாமல், மீறுகிறார்கள் என்று அர்த்தம் இல்லை […]
அதிர்ச்சி..! தமிழக போக்குவரத்து துறையில் சேவை கட்டணங்கள் பல மடங்கு உயர்வு..!

You May Like