fbpx

இந்த தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலைநிறுத்தம்..!! போக்குவரத்துக் கழக சம்மேளனம் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் சிஐடியூ-வின் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பின் மாநிலத் தலைவர் அ.சௌந்தரராசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தற்போது ஏராளமான பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, தொழிலாளர்கள் விவகாரத்தில் சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சரின் அறிவிப்பு ஒன்றாகவும், ஆனால், அரசு நடந்துகொள்வது வேறுவிதமாகவும் இருக்கிறது.

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வைப்பு நிதி, காப்பீட்டு நிதி உள்ளிட்டவற்றிலிருந்து ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் அரசு எடுத்து செலவழித்துவிட்டது. ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 90 மாதங்களுக்கு மேலாக வழங்க வேண்டிய பஞ்சப்படி இதுவரை வழங்கப்படவில்லை. இப்படியாக போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பணப் பலன்களை வழங்காமல் இருந்து வருகிறது.

போக்குவரத்துக் கழகத்தில் 15 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக சென்னையில் மட்டும் 900 அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இதனால், மக்களுக்கான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 1,424 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இந்தப் பணியிடங்களுக்கு 600 பேரை மட்டும் நிரந்தரப் பணியாளர்களாக எடுத்துவிட்டு, மீதமுள்ள 800 காலியிடங்களுக்கு தனியார் அவுட் சோர்ஸிங் மூலம் தொழிலாளர்களை நியமிக்க அரசு திட்டமிட்டு அதற்கான டெண்டரும் வெளியிட்டிருக்கிறது.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மே 3ஆம் தேதிக்கு பின்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கான முன்னறிவிப்பு நோட்டீஸ் போக்குவரத்துக் கழகத்திடம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 18) வழங்கப்படும். 15 நாட்களுக்குள் அரசு பேச்சுவார்த்தை நடத்தி எங்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணாவிட்டால், மே 3ஆம் தேதிக்குப் பிறகு காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

பிரியா பவானி ஷங்கரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..? பத்து தல படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Tue Apr 18 , 2023
வளர்ந்து வரும் இளம் நடிகையான பிரியா பவானி சங்கரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரை சீரியலின் மூலம் வெள்ளித்திரைக்குள் நுழைந்த பிரியா பவானி சங்கர், எளிமையான தோற்றத்துடன் நம் பக்கத்து வீட்டுப் பெண் போல் இருப்பதால் வெகு சீக்கிரமே ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. அதுவும் சிம்புவின் பத்து தல படத்திற்குப் பிறகு அவர் தன்னுடைய சம்பளத்தை […]

You May Like