fbpx

அதிர்ச்சி…!மாணவர் தூக்கிட்டு தற்கொலை…! சென்னை ஐஐடி பேராசிரியர் பணியிடை நீக்கம்

சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மார்ச் 31-ம் தேதி ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மாணவர்களின் தற்கொலைக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற டிஜிபி திலகவதி தலைமையில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழு நடத்திய விசாரணையில், பேராசிரியர் ஆசிஷ்குமார் சென், சச்சின் குமாரை பல மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தும் நோக்கில் பேசியதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

மேற்கு வங்கத்தை சேர்ந்த சச்சின் குமார் ஜெயின் (31). சென்னை ஐஐடியில் பிஎச்டி படித்து வந்தார். இவர் நண்பர்களுடன் வேளச்சேரி பிராமின் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி படித்து வந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் சச்சின் குமார் ஜெயின் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வேளச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Vignesh

Next Post

திருமணத்திற்கு ஏதேனும் வித்தியாசமாக பண்ணனுமா..? நீங்களும் ஹெலிகாப்டரை புக் செய்யலாம்..!! எப்படி தெரியுமா..?

Tue Nov 28 , 2023
திருமணத்திற்கு ஹெலிகாப்டரை புக் பண்ண என்ன செய்ய வேண்டும்? அதற்கான வாடகை குறித்த விவரங்களை பார்க்கலாம். இப்போதெல்லாம் பெரும்பாலானோர் தங்கள் திருமணத்தை மறக்க முடியாத நிகழ்வாக மாற்ற விரும்புகின்றனர். திருமணம் நடைபெறும் இடம் முதல் உணவு வரை ஒவ்வொருவரும் வித்தியாசமாக ஏதாவது செய்ய ஆசைப்படுகின்றனர். திருமணத்திற்கு ராயல் லுக் கொடுக்க, மணப்பெண்ணை ஹெலிகாப்டரில் அழைத்து வரும் நிகழ்வு தற்போது அதிகரித்துள்ளது. நீங்களும் உங்கள் துணைக்கு ஏதாவது செய்ய விரும்பினால், திருமணத்திற்கு […]

You May Like