நீட் தேர்வு எழுதிய மாணவி, தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் கொளுத்தினிப்பட்டியை சேர்ந்தவர்கள் சேகர்-லட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு மகளான பிரீத்தி, பிளஸ்-2 முடித்த நிலையில், கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்தார். இதனால், இந்த ஆண்டு நீட் தேர்வுக்காக வேங்காம்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தார். கடந்த மாதம் நடந்த நீட் தேர்வையும் பிரீத்தி எழுதினார். இதற்கிடையே, கடந்த ஆண்டைபோலவே இந்தாண்டும் நீட் தேர்வில் தோல்வி அடைந்து விடுவேனோ என அடிக்கடி வீட்டில் சொல்லிக் கொண்டு புலம்பி வந்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்றிரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரீத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பிரீத்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வு எழுதிய மாணவி, தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.