fbpx

மாணவர்கள் ஹேப்பி..!! 2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!! ஆட்சியர்கள் அறிவிப்பு..!!

திருச்சி, கரூர், திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், இன்று கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை விலக உள்ள நிலையில் தான் மழை தீவிரமடைந்துள்ளது. நேற்று மற்றும் நேற்று முன் தினமும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய மழை பெய்தது. இதேபோல் திண்டுக்கல், திருச்சி, கரூர், விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

குறிப்பாக மாலை நேரங்களில் நல்ல மழை பெய்தது. திண்டுக்கல்லில் தொடர்ந்து கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக திண்டுக்கல்லில் இன்று ஒருநாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவித்துள்ளார். இதேபோல் கரூரிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

இன்றோடு முடிகிறது நீதிமன்ற காவல்..!! மீண்டும் சிறைக்கு செல்கிறாரா டிடிஎஃப் வாசன்..!!

Mon Oct 16 , 2023
யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இவர், கடந்த மாதம் 17ஆம் தேதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் உயர்ரக பைக்கில் சென்று சாகசம் செய்ய முயன்று விபத்து ஏற்பட்டு காயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு சென்ற நிலையில், காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி […]

You May Like