fbpx

’மாணவர்களே இனி டிஸ்மிஸ் தான்’..!! ரூ.50,000 வரை அபராதமும் கூட..!! வெளியான பரபரப்பு உத்தரவு..!!

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அவ்வப்போது மாணவர்கள் மோதலில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. இதனால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, மேம்படுத்தப்பட்ட விதிகளை பல்கலைக்கழக ஒழுங்கு விதிமுறை குழு பிறப்பித்துள்ளது. அதில் ‘பல்கலைக்கழக மாணவர்கள் தனிநபராகவோ அல்லது குழுவாகவோ சேர்ந்து வளாகத்திற்குள் போராட்டம், கைகலப்பு, அடிதடி, விடுதி வளாக பொருட்களை சேதப்படுத்தல், ராகிங் போன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடாது.

அவ்வாறு ஈடுபடும் மாணவருக்கு தலா ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், பிரச்சனையின் தீவிரத்தின்படி மாணவர் மேல் சஸ்பெண்ட் மற்றும் டிஸ்மிஸ் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள பல்கலைக்கழக நிர்வாகம் தயங்காது’ என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Chella

Next Post

சூப்பரோ சூப்பர்..!! விவசாயிகளுக்கு இலவச எரிபொருள்..!! டோக்கன்கள் விநியோகம்..!!

Fri Mar 3 , 2023
நாட்டில் விவசாயிகளுக்கு இன்று முதல் இலவச எரிபொருளை டோக்கன்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை விவசாய அபிவிருத்தி திணைக்களம் முன்னெடுத்துள்ளதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு பயிர்ச் செய்கைக்கு பயன்படுத்துவதற்காக சீன அரசாங்கம் 6.98 மில்லியன் லிட்டர் டீசலை இலவசமாக வழங்கியிருந்தது. இந்நிலையில், விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் நாட்டின் பல மாவட்டங்களுக்கு உரிய டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை இன்று கொழும்பு உள்ளிட்ட […]

You May Like