fbpx

மாணவர்களே உஷார்!!! இந்த மாதிரி மோசடி அழைப்புகள் வந்தால் ஏமாந்து விடாதீர்கள்…!

மாணவர்களை குறிவைத்து ஒரு கும்பல் பண மோசடியில் ஈடுபட்டு வந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. மர்ம நபர் ஒருவர் மாணவர்கள் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு உங்களுக்கு கல்வி உதவி தொகை வந்துள்ளது எனவும், அதனை வாங்க ஆன்லைனில் 3000 ரூபாய் அனுப்ப வேண்டும் என கூறி மோசடி செயலில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அந்த மாணவர்கள் தங்களது பள்ளி ஆசிரியரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது “யாரிடமும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம், அரசு மூலம் உதவித்தொகை வழங்கினால் உங்களது வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும். மர்ம நபர்களுக்கு பணத்தை அனுப்ப வேண்டாம்” என அறிவுரை வழங்கியுள்ளார். அந்த நபருக்கு மாணவர்களின் பெயர்கள், செல்போன் எண்கள் எப்படி கிடைத்தது என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகத்தினரும் விசாரணை நடத்தி மோசடி நடைபெறுவதை தடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Kathir

Next Post

இப்படி நடந்தால் "இலங்கை இந்தியாவின் மாநிலமாக மாறும்" - இலங்கை எம்.பி. பேச்சு

Tue Nov 29 , 2022
குழிக்குள் இலங்கையை சிக்கவைப்பதற்கு இந்தியாவும் மேற்கு வங்கமும் முயற்சிப்பதாக இலங்கையின் தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவரின் எம்.பி. விமல் வீரவன்ச புகார் கூறியுள்ளார். இது குறித்து பேசிய விமல் வீரவன்ச இலங்கையில் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள இந்தியாவும், மேற்வங்க நாடுகளும் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார். மேலும் பேசியா அவர், தமது நாட்டு ரூபாயை, இலங்கையில் செயற்படுத்துவதற்கு இந்தியா முயற்சிக்கின்றது, அவ்வாறு […]

You May Like