10-ம் வகுப்பு ஏப்ரல் 2023 பொதுத்தேர்விற்கு மாணவர்கள், நாளை மாலை வரையில் விண்ணப்பிக்கலாம்.
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்வினை எழுத விரும்பி, அறிவியல் செய்முறைத்தேர்வுக்கு மாணவர்கள், கடந்த 28-ம் தேதி வரையில் மாவட்ட கல்வி அலுவலகங்களில் பதிவு செய்து வந்தனர்.
மேலும் இதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் அறிவியல் செய்முறைப் பயிற்சி வகுப்பிலும் கலந்துகொள்ள வேண்டும். அறிவியல் பாட செய்முறைப் பயிற்சிக்கு விண்ணப்பித்தப் பின்னர், அதற்கான அத்தாட்சி சீட்டைப் பெற்று மாவட்டக்கல்வி அலுவலகங்களில் அமைந்துள்ள அரசுத் தேர்வு மையத்தில் சமர்ப்பித்த பின்னர், ஏப்ரல் 2023 பொதுத்தேர்விற்கு ஜனவரி 3-ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.