fbpx

’கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து மாணவர்களுக்கு விலக்கு’..! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வைரஸ் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கிடையே, கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்புக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படித்து வந்தாலும், அவர்களும் கல்விக் கட்டணத்தை செலுத்துவதில் இருந்து தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது.

’கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து மாணவர்களுக்கு விலக்கு’..! தமிழக அரசு அறிவிப்பு

இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ”கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து பாதிக்கப்பட்ட குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கும் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் அதே பள்ளியில் கல்வி பயில்வதை பள்ளிகள் உறுதி செய்திட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

நடிகர் தனுஷ் இந்த வழக்கில் ஆஜராக வேண்டாம்.. உயர்நீதிமன்றம் உத்தரவு...

Mon Aug 1 , 2022
வேலையில்லா பட்டத்தாரி படத்தில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் தொடர்பான வழக்கில் ஆஜராவதில் இருந்து நடிகர் தனுஷுக்கு விலக்களிப்பட்டுள்ளது.. வேலையில்லா பட்டதாரி படத்திலும், போஸ்டரிலும் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததாக புகார் எழுந்திருந்தது.. இந்த புகார் தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் மீது தமிழக சுகாதாரத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.. இந்த வழக்கு விசாரணை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.. இதுதொடர்பாக நடிகர் தனது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆஜராக வேண்டும் […]

You May Like