fbpx

’இந்த விஷயத்தில் மாணவர்கள் குழம்ப தேவையில்லை’..! அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!

”வழக்கமான நடைமுறையின்படியே 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும்” என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் காமராஜர், ”11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்பது போன்ற செய்தி எப்படி வெளிவந்தது? என்று எங்களுக்கு தெரியவில்லை. எங்களை பொறுத்தவரையில் எப்போதும் இருக்கக்கூடிய தேர்வு முறைதான் இருக்கும். பொதுவாக தனியார் பள்ளிகள் 11ஆம் வகுப்பு பாடத்தை நடத்தாமலேயே நேரடியாக 12ஆம் வகுப்பு பாடத்தை நடத்தி, அதில் மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைக்க வேண்டும், தங்கள் பள்ளி அதில் சிறந்துள்ளது என்று காட்ட வேண்டும் என்று சென்றுவிடுகிறார்கள்.

’இந்த விஷயத்தில் மாணவர்கள் குழம்ப தேவையில்லை’..! அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!

11ஆம் வகுப்பு பாடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் போய்விட்டால், போட்டித் தேர்வுகளின் போது மாணவ-மாணவிகள் சிக்கிக்கொள்வார்கள். அதனை கருத்தில் கொண்டு தான் இந்த 11ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதுவரையில் அதனை ரத்து செய்வது தொடர்பான எண்ணம் எதுவும் இல்லை. மாணவர்கள் இந்த விஷயத்தில் குழம்ப தேவையில்லை. வழக்கமான நடைமுறையின்படியே 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும்”. இவ்வாறு அவர் கூறினார்.

Chella

Next Post

”அமைதிக்கு கொள்ளி வைத்துவிட்டு, புள்ளி விவரங்களால் வாயை அடைக்கலாம் என்று நினைக்கிறார்கள்” - ஜெயக்குமார்

Mon Aug 15 , 2022
”மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் அரசு கவனம் செலுத்தினால், தமிழகம் மகிழ்ச்சி அடையும்” என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களின் உயிரை காக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறையை கடந்த 14 மாத காலமாக தன்னுடைய நிர்வாகத்தால் கோமா நிலைக்கு கொண்டு சென்ற மா.சுப்பிரமணியன், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பற்றி அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். மக்கள் நல பிரச்சனைகளை தீர்க்க […]
”முதல்வரின் டெல்லி பயணத்தால் தமிழகத்திற்கு எந்த பயனுமில்லை”..! - ஜெயக்குமார் விமர்சனம்

You May Like