fbpx

மாணவர்களே..!! பள்ளிகளுக்கு இனி சனிக்கிழமை லீவு இல்லையாம்..!! கெடுபிடி காட்டும் பள்ளிக்கல்வித்துறை..!!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழை மற்றும் மிக்ஜாம் புயலால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அந்த பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 4 வாரங்களுக்கு சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள் என்று சென்னை மாவட்ட முதன்மை அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் புயல் மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய வேலை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 4 வாரங்களுக்கு சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள் என்று சென்னை மாவட்ட முதன்மை அலுவலர் அறிவித்துள்ளார். ஜனவரி மாதத்தில் 2 சனிக்கிழமைகள், பிப்ரவரியில் 2 சனிக்கிழமைகள் பள்ளி வேலை நாள். அதன்படி, ஜனவரி 6 மற்றும் 20ஆம் தேதிகளிலும், பிப்ரவரி 3 மற்றும் 17 ஆகிய 4 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

கவனம்...! வரும் 22-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு...! அதற்குள் இதை முடிக்க வேண்டும்...!

Sat Jan 6 , 2024
வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் 2024 – வருகின்ற 22.01.2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் 2024 வருகின்ற 22.01.2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதுகுறித்து சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது; இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி 2024-ஆம் ஆண்டிற்கான புகைப்பட வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 27.10.2023, வெள்ளிக்கிழமை அன்று […]

You May Like