fbpx

மாணவர்களே வீட்டுக்கு கவனமா வாங்க..!! 10 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்..!! 23 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்..!!

தென்மேற்கு வங்கக்கடல், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்துள்ளது. அதுமட்டுமின்றி, அடுத்த ஒருசில நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், சென்னை, திருவள்ளூர், திருச்சி, பெரம்பலூர், சேலம், நாமக்கல், தருமபுரி, நெல்லை, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Chella

Next Post

போட்றா வெடிய.! சலார் படக் குழுவின் அதிரடியான வெற்றி கொண்டாட்டம்.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!

Mon Jan 8 , 2024
கேஜிஎஃப் 1&2 திரைப்படங்களின் வெற்றியின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் இயக்குனர் பிரசாந்த் நீல். இவரது இயக்கத்தில் தற்போது சலார் என்ற மற்றொரு ஆக்சன் படம் வெளியானது. பிரபாஸ் பிரிதிவிராஜ் ஸ்ருதிஹாசன் ஜெகபதி பிரபு உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த திரைப்படத்தை ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது இந்தத் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதுவரை 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி […]

You May Like