fbpx

மாணவர்களே..!! இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை இல்லையாம்..!! ஆட்சியர்கள் திடீர் அறிவிப்பு..!!

இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில நேற்று இரவு மழை வெளுத்து வாங்கியது. இரவு 7 மணிக்கு தொடங்கிய கனமழை இரவு முழுவதும் நீடித்தது.

இந்நிலையில், கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 2 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

காலையில் இருந்து மழை பெய்து கொண்டிருந்தாலும், விடுமுறை விடப்படவில்லை. எனவே, மாணவர்கள் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோட் ஆகியவற்றை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Chella

Next Post

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்கும் திட்டம்...! மத்திய அரசு ஒப்புதல்...!

Thu Nov 30 , 2023
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2024-25-ம் ஆண்டு முதல் 2025-26-ம் ஆண்டு வரை ரூ.1261 கோடி மதிப்பீட்டில் ட்ரோன்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது 2023-24-ம் ஆண்டு முதல் 2025-2026-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் […]

You May Like