fbpx

பிரமிக்க வைக்கும் கலைப்படைப்பு!… சீனப் பெருஞ்சுவர் மீது உலகின் மிக நீளமான ஓவியம்!… கின்னஸ் சாதனை படைத்த பெண்!

சீனப் பெருஞ்சுவரின் மேல் உலகின் மிக நீளமான ஓவியத்தை உருவாக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் பெயரைப் பதித்துள்ளார் பெண் ஓவியர். இவரின் கலைப்படைப்பு பிரமிக்கவைக்கும் வகையில் உள்ளது.

யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட சீனப் பெருஞ்சுவர், உலகின் ஏழு அதிசயங்களுள் முதன்மையானது. இடைவெளி இல்லாமல் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நீளம் கொண்ட சீன பெருஞ்வர், சான்காய்குவானில் இருந்து ஜியாயூகுவான் வரை இருக்கிறது. எந்திரங்கள் பயன்பாடு அறவே இல்லாத அந்த காலக்கட்டத்தில் முற்றிலும் மனிதர்கள் உழைப்பை பயன்படுத்தி கட்டப்பட்டது. இந்த சுவரின் கட்டுமானப்பணிகள் கி.மு. 3-ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டன. இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த குவோ ஃபெங் என்ற பெண் ஓவியர், சீனப் பெருஞ்சுவரின் மேல் உலகின் மிக நீளமான ஓவியத்தை உருவாக்கி வரலாற்றில் தனது பெயரைப் பதித்துள்ளார்.

அவரது குறிப்பிடத்தக்க சாதனை கின்னஸ் உலக சாதனைகளில் (GWR) ஒரு விரும்பத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. குவோ ஃபெங், சீனப் பெருஞ்சுவரின் மேல் அமர்ந்து 60 நாட்களுக்கும் மேலாக பிரமிக்க வைக்கும் தனது கலைப் படைப்பை 1,014-மீட்டர் நீளமுள்ள கேன்வாஸில் வரைந்து இந்த சாதனையை படைத்துள்ளார். குவோ ஃபெங்கின் இணையற்ற இந்த சாதனையை கின்னஸ் அங்கீகரித்துள்ளது. இந்த அசாத்திய சாதனையை அவர்களின் இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு வசீகரிக்கும் வீடியோவாக பகிர்ந்துள்ளனர்.

Kokila

Next Post

போயஸ் கார்டன் இல்லம் முன்பு திரண்ட ரசிகர்கள்...! பொங்கல் வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் ...!

Mon Jan 15 , 2024
போயஸ் கார்டன் இல்லம் முன்பு திரண்ட ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். பொங்கல் மற்றும் தமிழர் திருநாளையொட்டி நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க, போயஸ் கார்டன் இல்லத்திற்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இன்று காலை முதல் திரண்டு நின்றனர். அப்போது ரஜினிகாந்த் அவரது வீட்டின் கேட் முன்பு நாற்காலி போட்டு அதன் மீது ஏறி நின்று ரசிகர்களுக்கு கையை அசைத்து வாழ்த்து தெரிவித்தார். ரசிகர்கள் சிலர் கொடுத்த […]

You May Like