fbpx

Sophia Leone: ஆபாச திரைபடத்துறையில் அடுத்தடுத்து நிகழும் மரணங்கள்!… 3 மாதத்தில் 4 நடிகைகள் பலி!

Sophia Leone: அமெரிக்க ஆபாச திரைப்படத் துறையில் அடுத்தடுத்து நடிகைகள் உயிரிழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் Adult படங்களில் நடித்து வந்த நடிகர்கள் சமீபகாலமாக அடுத்தடுத்து உயிரிழந்து வருவது தொடர் கதையாகியுள்ளது. கடந்த 3 மாதங்களில் 4வது நபராக நடிகை சோபியா லியோ மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். அமெரிக்காவின் மியாமி நகரைச் சேர்ந்தவர் நடிகை சோபியா லியோன். 26 வயதான இவர், தனது 18வது வயதில் Adult படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த இவருக்கு அமெரிக்க மாடலிங் ஏஜென்ஸியான 101 மாடலிங் இங்க் நிறுவனத்தின் மூலம் குறுகிய காலத்தில் மிகப்பெரிய நட்சத்திரமாக மாறினார். கடந்த 9 ஆண்டுகளில் ஒரு பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டவராக சோபியா லியோன் மாறினார்.

இந்த நிலையில் மெக்ஸிகோ நகரிலுள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த மார்ச் 1ஆம் தேதி சுயநினைவின்றி நடிகை சோபியா கிடந்துள்ளார். இதனையடுத்து அவரின் குடும்பத்தினர் சோபியாவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். எனினும், சோபியா சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்துவிட்டதாக அவரின் வளர்ப்பு தந்தை மைக் ரொமேரோ குறிப்பிட்டுள்ளார்.

அவரில் உயிரிழப்பை பலர் உறுதி செய்துள்ளனர். கோ ஃபன்ட் மீ என்ற நிதி திரட்டும் சமூக வலைதளத்தில் இந்த செய்தியை குறிப்பிட்டுள்ளது. அதேபோல சோபியாவுக்கு நெருக்கமான ஃபுளோரிடாவைச் சேர்ந்த ஏஎம்ஏ ஏஜென்ஸியின் உரிமையாளர் பிரையன் பெர்க்கும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக, காக்னி லின் தைனா, ஃபீல்ட்ஸ்(24), லின் கார்ட்டர்(36), ஜெஸ்ஸி ஜேன்(43) ஆகிய நடிகைகள் இந்த ஆண்டில் அடுத்தடுத்து மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு!… இந்தியாவில் ஒரு மில்லியன் வேலைவாய்ப்புகள்!… மத்திய அமைச்சர் சொன்ன குட்நியூஸ்!

Kokila

Next Post

TNPSC குரூப் 4 தேர்வு..!! 6,244 காலிப்பணியிடங்கள்..!! 20,37,094 பேர் விண்ணப்பம்..!!

Mon Mar 11 , 2024
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அந்தவகையில் கிராமநிர்வாக அலுவலர், வனக் காப்பாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட குரூப் 4 பதவிகளில் வரும் 6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜனவரியில் வெளியிட்டது. இந்நிலையில், குரூப் 4 தேர்வுக்கு 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் 108, […]

You May Like