fbpx

மூட்டுவலியால் அவதிப்படுகிறீர்களா?… அப்போ இந்த 3 பொருட்களை தவிர்த்திடுங்கள்!

மூட்டுவலியை குணமாக்க நாம் எடுத்துக்கொள்ளவேண்டியதும், தவிர்க்கவேண்டியதும் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மூட்டு வலி என்பது வயதானவர்களுக்கு வரக்கூடியது என்பது மாறி இப்போது சிறிய வயதில் உள்ளவர்களுக்கும் வருகிறது. இப்போதெல்லாம் 30 வயது ஆனாலே கீழே உட்கார முடியவில்லை, சம்மணம் போட்டு அமர முடியவில்லை, சிறிது தூரம் நடந்தாலே முட்டி வலிப்பது போன்றவை வருகிறது. மூட்டுதான் நம் உடலுக்கு மிகப்பெரிய பலம். ஆனால் இப்போதுள்ள தலைமுறைகள் இந்த பலத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார்கள். நாம் சில பொருட்களை தவிர்த்து வந்தால் இந்த மூட்டு வலியில் இருந்து தப்பிக்கலாம். இதுவரை மூட்டு வலி இல்லாதவர்கள், இப்போது இருந்து இந்த பொருட்களை தவிர்த்தால், மூட்டு வலியே வராமல் தடுக்கலாம். மூட்டு வலி உள்ளவர்கள் இந்த பொருட்களை தவிர்த்தால் வலி கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

மேலும் மூட்டு வலி நமக்கு வரும் போது முதலில் மாத்திரைகள் சாப்பிட ஆரம்பிக்கிறோம், பிறகு வலி அதிகமாகும் போது மருத்துவரை போய் பார்க்கிறோம். அவரும் வலி மாத்திரைகளை தான் கொடுப்பார். இப்படி நாம் தொடர்ந்து வலி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது நமக்கு சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுகிறது. மூட்டுக்களை இயற்கையான முறையில் பாதுகாக்க, நம் அன்றாட வாழ்வில் நாம் உண்ணும் வெள்ளை பொருட்களை தவிர்த்திடுங்கள். முதலில் முக்கியமாக தவிர்க்க வேண்டியது வெள்ளை சர்க்கரை, இந்த வெள்ளை சர்க்கரை உடலுக்கு கெடுதல் என்பது இப்போதுள்ள அனைவருக்கும் தெரியும். இந்த சர்க்கரையை எப்போதாவது ஒரு முறை எடுப்பதால் எந்த பாதிப்பும் இல்லை.

ஆனால் நாம் தினமும் அருந்தும் டீ, காபி போன்றவற்றிலும், வேறு ஏதாவது ஒரு வகையிலும் சர்க்கரையை நாம் தினமும் எடுத்து கொள்கிறோம். இந்த சர்க்கரையானது நமது மூட்டுகளை பலவீனப்படுத்துக்கிறது. மேலும் மூட்டுகளில் சிறிய அளவிலான ஓட்டைகளை ஏற்படுத்துகிறது. இந்த சிறு துளைகளானது மூட்டுகளில் வலியை ஏற்படுத்தி, மூட்டுக்களில் சத்தத்தை ஏற்படுத்துகிறது. அடுத்ததாக மைதா உணவுகளை எடுத்து கொள்ள வேண்டாம். அதாவது, மைதாவில் தயாரிக்கும் எந்த உணவு பொருட்களையும் எடுத்தக் கொள்ள வேண்டாம். புரோட்டா, பேக்கரியில் பொருட்கள் அதாவது பேக்கரியில் கிடைக்கும் அனைத்து பொருட்களும் மைதாவில் தான் தயாரிக்கப் படுகிறது. அதனால் மைதாவை தவிர்த்திடுங்கள்.

மூன்றாவதாக அரிசி உணவுகளையும் தவிர்த்திடுங்கள். அதாவது 3 வேளைகளிலும் அரிசி உணவை எடுத்து கொள்ளாதீர்கள். இட்லி, தோசை, சாதம் என அரிசி உணவுகளையே எடுத்துக் கொள்ளாதீர்கள். வேறு வகையான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த 3 பொருட்களும் நம்முடைய மூட்டை சீக்கிரமாக தேய்ந்து போக வைக்கிறது. மூட்டுக்களை வறட்சியடைய வைக்கிறது. எனவே இந்த 3 வெள்ளை பொருட்களையும் தவிர்த்திடுங்கள். அரிசியை நாம் முழுமையாக தவிர்க்க முடியாது. ஆனால் மாற்றாக சிறு தானியங்களை எடுத்துக் கொள்ளலாம். அது மட்டும் இன்று கிழங்கு வகைகளில் உருளைக்கிழங்கு மூட்டு வலியை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம்!... உடல் சூடு முதல் சிறுநீர் கடுப்பு வரை அனைத்திற்கும் இந்த ஒரு பழம் போதும்!

Sat May 20 , 2023
இந்த கோடைக்காலத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் ஏற்படும் பிரச்சினை உடல் சூடு உள்ளிட்ட பிரச்சனைகளை சரிசெய்ய கதலி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கதலி பழம் இந்த ஒரு பழம் மட்டும் போதும் உடலில் உள்ள அனைத்து பிரச்சினைகளை போக்க கூடியது. இந்த கோடைக்காலத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் ஏற்படும் பிரச்சினை உடல் சூடு. அதாவது அடி வயிற்றில் சூடு, இரப்பையில் இருந்து, சிறு குடல், […]

You May Like