fbpx

பிரசவத்திற்கு பின் ஏற்படும் முதுகுவலியால் அவதியா?… இதை 3 நாள் மட்டும் சாப்பிடுங்க!… எல்லா வலியும் காணாமல் போயிடும்!

பூண்டு லேகியத்தை சாப்பிடுவதால், வாயுத்தொல்லையினால் உருவாகும் பிடிப்பு, வயிறு வலி, கை மற்றும் கால், முதுகுவலி போன்ற வலியிலிருந்து அவதிப்படுபவர்களுக்கு, இதை செய்து தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டு வந்தாலே பொதும், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மேலும் இதை ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து முற்றிலும் விடுபட முடியும். இந்த லேகியத்தை சாப்பிடுவதால் மலச்சிக்கல் மற்றும் இடுப்பு வலியிலிருந்து நல்ல தீர்வு கிடைக்கும்.

பூண்டு லேகியம் செய்ய தேவையான பொருட்கள்: பூண்டு – அரைக் கப், கருப்பட்டி – 2 துண்டுகள், இஞ்சிச்சாறு – தேவையான அளவு, பால் – ஒரு கப், செய்முறை: முதலில் பூண்டுகளை எடுத்து தோல் உரித்ததும், மிக்சிஜாரில் போட்டு பரபரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும். பின்பு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் கருப்பட்டி துண்டுகளை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரையும் அளவுக்கு, நன்கு கொதிக்க விட்டு, இறக்கி வடிகட்டி கொள்ளவும். அதன் பின்பு அடுப்பில் கடாயை வைத்து, அதில் பாலை ஊற்றி கொதிக்க வைத்ததும், அதனுடன் அரைத்த பூண்டு பேஸ்ட்டை போட்டு, இஞ்சிச்சாறு, வடிகட்டி வைத்த கருப்பட்டிசாறை ஊற்றியபின், கரண்டியால் அடிக்கடி கிளறி விட்டு, நன்கு கெட்டியானதும், இறக்கி ஆறவைத்து, உருண்டைகளாக உருட்டி எடுத்து பரிமாறினால், ருசியான பூண்டு லேகியம் ரெடி.

குறிப்பு: இந்த லேகியத்தை பிரிட்ஜில் வைத்து ஒரு மதத்திற்கும் மேல் பயன்படுத்தி கொள்ளலாம். இது இடுப்பு வலிக்கும் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

Kokila

Next Post

உடலில் இரத்தத்தை சுத்தப்படுத்த!... இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க போதும்!

Wed Jun 21 , 2023
மனித உடம்பிலுள்ள இரத்தத்தை சுத்தப்படுத்தவும், உடம்பிலுள்ள கொலஸ்ராலை குறைத்து, உடம்பை ஆரோக்கியமாக வைக்க உதவும் இயற்கை உணவுகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: உடம்பிலுள்ள ரத்தமானது சுத்தமாக இருப்பதனால் ஆரோக்கியமான சருமத்தை தக்கவைக்க பெரும் உதவியாக இருக்கிறது. உடம்பு இருக்கின்ற ரத்தம் சுத்தமாக இல்லாவிட்டால், முகப் பருக்கள், கொப்பளங்கள், தடிப்புகள் வரலாம். மேலும் இதனால் ஒவ்வாமை, குமட்டல் தலைவலி, தலை சுற்றல் போன்ற வியாதிகளை உருவாக்க கூடும் .இரத்த […]

You May Like