fbpx

Suicide Attempt | புதுச்சேரி சிறுமி வழக்கில் முக்கிய குற்றவாளி தற்கொலை முயற்சி..!! பெரும் பரபரப்பு..!!

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான விவேகானந்தன், இன்று தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் மாயமான 5-ஆம் வகுப்பு பள்ளி மாணவி அங்குள்ள கால்வாயில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சடலமாக மீட்கப்பட்டாா். முத்தியால்பேட்டை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சோலை நகரை சோந்த 6 பேருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதில் 5 போ சிறுவா்கள் என்பதும், அனைவரும் போதைப் பொருள்களைப் பயன்படுத்தி வருவதும் தெரியவந்தது.

இந்த வழக்கில் புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 56 வயதான விவேகானந்தன் மற்றும் 19 வயதேயான கருணாஸ் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் இருவரையும் போலீஸ் காவலில் எடுக்க அனுமதி கோரிய வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான விவேகானந்தன் சிறையில் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். சக கைதி கருணாஸ் கூச்சலிட்ட நிலையில், சிறைக் காவலர்கள் விவேகனந்தனை காப்பாற்றியதாக கூறப்படுகிறது.

Read More : ADMK | கட்சியை கலைத்து விட்டு அதிமுகவில் இணைந்த முக்கிய புள்ளி..!! பெருகும் ஆதரவால் குஷியில் எடப்பாடி..!!

Chella

Next Post

PM Modi | தமிழ்நாட்டில் மீண்டும் புயலை கிளப்ப வரும் பிரதமர் மோடி..!! இந்த டைம் பிளானே வேற..!!

Mon Mar 11 , 2024
மக்களவை தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், மீண்டும் பிரதமர் மோடி தமிழ்நாடு வர உள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் அதற்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். நடப்பாண்டில் இதுவரை 4 முறை பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார். புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், கட்சி சார்ந்த […]

You May Like