fbpx

சூப்பர் அறிவிப்பு..!! ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்..!! கோடிகளை ஒதுக்கிய மத்திய அரசு..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்வே துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய போக்குவரத்து இணைப்பில் முன்னணி துறையாக ரயில்வே துறை செயல்பட்டு வருகிறது. இதில், 11 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். அத்துடன் ரயில்வே துறையை நாள்தோறும் கோடிக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, ரயில்வே பணியாளர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சியமைத்த பின்னர் கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து 78 நாட்கள் ஊதியத்தொகையை ரயில்வே ஊழியர்களுக்கு போனஸாக அறிவித்து வருகிறது. அதன் அடிப்படையில் 12-வது ஆண்டாக இந்த ஆண்டும் 78 நாட்கள் ஊதியத் தொகையை தீபாவளி போனஸாக அறிவித்துள்ளது.

சூப்பர் அறிவிப்பு..!! ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்..!! கோடிகளை ஒதுக்கிய மத்திய அரசு..!!

ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின் பேசிய அமைச்சர் அனுராக் தாக்கூர், குறைந்தபட்ச ஊதியம் பெறும் ஒரு ரயில்வே ஊழியருக்கு அதிகபட்சமாக ரூ.17,951 போனஸாக வழங்கப்படும். மத்திய அரசின் அறிவிப்பால், ரயில்வே ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தீபாவளி போனஸ் வழங்குவதன் மூலம் 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு மொத்த போனஸ் ரூ.1,832 கோடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

தமிழகமே.. இனி ஆன்லைன் மூலம் மரக்கன்றுகளை ஆர்டர் செய்யலாம்...! தமிழக அரசு அறிவிப்பு...!

Thu Oct 13 , 2022
தமிழகத்தில்‌ வணப்பரப்பை அதிகப்படுத்தி, பசுமைப்‌ போர்வையை விரிவுபடுத்தும்‌ வகையில்‌ பசுமை தமிழ்நாடு இயக்கம்‌ முதலமைச்சர்‌ அவர்களால்‌ கடந்த 24.09.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழக வணம்‌ மற்றும்‌ பசுமைப்‌ பரப்பினை 33சதவீதமாக உயர்த்துததனை முக்கிய நோக்கமாகக்‌ கொண்டு இவ்வியக்கம்‌ தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும்‌ பல்வேறு இடங்களில்‌ மரம்‌ வளர்ப்பிற்கு, ஊக்குவித்தல்‌ இவ்வியக்கத்தின்‌ நோக்கமாகும்‌. அதனடிப்படையில்‌, வேளாண்‌ பெருமக்கள்‌, தொழில்‌ நிறுவனங்கள்‌. மக்கள்‌ நலச்‌சங்கங்கள்‌, இயற்கை ஆர்வலர்கள்‌ மற்றும்‌ தணி நபர்கள்‌ […]

You May Like