மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு விரைவில் ரூ.6,000 வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு ரூ.6,000 உதவித்தொகை தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டது.
இந்நிலையில், புயல் நிவாரணம் கேட்டு விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் நிவாரணம் கேட்டு ரேசன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் ரூ.6,000 வழங்கப்படும் என்றும் குடும்ப அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கான கணக்கெடுப்பு பணி நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.