முன்னுரிமை பட்டியலில் மாற்றுத் திறனாளிகளை சேர்க்கவும் அடிப்படை தகுதிகளாக நிலமற்றவர்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வருவாய்த்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி சட்டபேரவையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் கட்ட வருவாய்த் துறை மூலம் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் முன்னதாகவே 1996ஆம் வெளியிட்ட முன்னுரிமைப் பட்டியலில் மாற்றுத் திறனாளிகளை சேர்க்கவும் அடிப்படை தகுதிகளாக நிலமற்றவர்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில், வெளியிடப்பட்ட முன்னுரிமைப் பட்டியலில் முப்படைகள், துணை ராணுவப் படைகளில் பணியில் இருக்கும்போது உயிரிழந்தவர்கள் அவர்களின் குடும்பத்தினர், கொத்தடிமைத் தொழிலாளர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் நிலமற்ற ஏழைகள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற மற்றும் துணை ராணுவப் படைகளில் பணியாற்றியவர்கள் மேலும் இதர அடிப்படை தகுதிகளை பெற்ற பயனாளிகள் போன்றவர்களுக்கு பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளனர்.