fbpx

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் திட்டங்கள்..!! நாளை பட்ஜெட்டில் இடம்பெறும் முக்கிய அறிவிப்புகள்..!!

தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாளை தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட்டில் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகையாக வழங்கும் திட்டம்தான். திமுக தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், அதற்கான அறிவிப்பு வரவில்லை. இதனால், அரசியல் தலைவர்கள் விமர்சனங்கள் செய்து வந்தனர்.

இதற்கிடையே, ஈரோடு இடைத்தேர்தலின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கத் தொடங்குவதற்கான தேதி வரும் பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார். இந்நிலையில், நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இத்திட்டத்திற்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த பட்ஜெட்டில் துறை சார்ந்த சில முக்கிய அறிவிப்புகளும் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. மேலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பினருக்கான முக்கிய அறிவிப்புகளையும் பட்ஜெட்டில் அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

”இடி மின்னலுடன் தமிழகத்தை தாக்க வரும் மழை”..!! வானிலை மையம் சொன்ன புதிய ரிப்போர்ட்..!!

Sun Mar 19 , 2023
தமிழ்நாட்டில் பல இடங்களில் மிதமான மழை தொடரும் நிலையில், வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் கணித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதமே வெப்பம் உச்சம் தொட்டது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வெப்பநிலை சில நாட்கள் சதமடிக்கவும் கூட செய்தது. இதற்கிடையே, சில நாட்களாக மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடுமையான வெப்பத்தில் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், இப்போது வெப்பம் […]

You May Like