fbpx

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவு..! கல்லூரி மாணவனிடம் உளவுத்துறை விசாரணை..!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய இயக்கங்களுக்கு சமூக வலைத்தளத்தில் ஆதரவு அளித்து வந்ததாக கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லி பள்ளிவாசல் தெருப் பகுதியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் அனாஸ் அலி. இவர், இன்று அதிகாலை மத்திய உளவுத்துறை மற்றும் சிறப்பு புலனாய்வு துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் உள்ள காவல் நிலையத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்போது வரையிலான விசாரணையில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய இயக்கங்கள், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் பதிவிடும் பதிவுகளை தொடர்ந்து (Like) விரும்பியும், மற்றவர்களுக்கு (Share) பகிர்ந்தும் வருவதோடு, அதை தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளார். அதனடிப்படையில், இவரது சமூக வலைதளப்பக்கங்கள் கண்காணிக்கப்பட்டு, மாணவனை பிடித்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மாணவனிடம் பறிமுதல் செய்யப்பட்ட 2 செல்போன்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது

Chella

Next Post

’அண்ணாமலை கொச்சைப்படுத்துவார் என எதிர்பார்க்கவில்லை’..! அமைச்சர் பொன்முடி

Sat Jul 30 , 2022
தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு முதலமைச்சர் எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தான் பிரதமரிடம் வலியுறுத்தினேன். இதனை பாஜக தலைவர் அண்ணாமலை கொச்சைப்படுத்துவார் என எதிர்பார்க்கவில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்திலுள்ள ஊராட்சி முகமை அலுவலகத்தில்வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் மஸ்தான் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த […]

You May Like