fbpx

பள்ளி ஆசிரியையை வீட்டிற்கு அழைத்துச் சென்று பலமுறை உல்லாசம்..!! ரூ.25 லட்சத்தை சுருட்டிய தொழிலதிபர்..!!

கோவை மாவட்டம் கோட்டைமேட்டை சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இந்த பெண்ணுக்கு, அவர் பணிபுரியும் பள்ளியில் உடன் பணியாற்றும் சரவணம்பட்டியை சேர்ந்த சக ஆசிரியை ஒருவர் மூலமாக சந்தோஷ்குமார் (42) என்ற தொழிலதிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதல் முறையாக சந்தித்த பிறகு செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டு பேசத் தொடங்கியுள்ளனர்.

அதன்பிறகு இருவரும் நேரில் சந்தித்து நெருங்கி பழகியுள்ளனர். இந்நிலையில் ஒரு கட்டத்தில், திருமணம் செய்து கொள்வதாக அப்பெண்ணிடம் சந்தோஷ்குமார் கூறியுள்ளார். இதற்கு அப்பெண்ணும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சந்தோஷ்குமார் அப்பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.

மேலும், ஆசிரியையிடம் இருந்து பல்வேறு காலங்களில் பல்வேறு காரணங்களை கூறி ரூ.25 லட்சம் பணத்தை தொழிலதிபர் பெற்றுள்ளார். இந்நிலையில் தான் ஆசிரியை திருமணம் செய்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார். ஆனால், தொழிலதிபர் உல்லாசமாக இருந்து விட்டு, பணத்தையும் பெற்று மோசடி செய்து விட்டு திருமணத்துக்கு மறுத்துவிட்டார். தொடர்ந்து பேசியதால் மிரட்டல் விடுத்து உள்ளார். இதனால் ஆசிரியை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், சந்தோஷ்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Chella

Next Post

இன்ஸ்டாகிராம் மூலம் LKG தோழியை கண்டுபிடித்த பெண்..!! 18 வருடங்களுக்கு பிறகு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

Sun Jun 4 , 2023
நேஹா என்ற பெண், தனது எல்.கே.ஜி (LKG) தோழியான லக்ஷிதாவைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு தனி இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கினார். தான் பார்க்க விரும்பும் குழந்தைப் பருவத் தோழியின் முழுப் பெயரைக்கூட அவரால் நினைவுகூர முடியவில்லை. அந்தக் கணக்கிற்கு @finding_Lakshita என்று பெயரிட்டு தன்னிடம் இருந்த ஒரே ஒரு குழந்தைப்பருவ ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராம் பயோவில் தன் தோழியைப் பற்றி சில தகவல்களையும் குறிப்பிட்டிருந்தார். “நீண்டகாலத்துக்கு முன் தொலைந்து போன என் […]

You May Like