தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் அன்னையர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று நாடு முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் அன்னையர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதில், உயிராக உருவான நம்மை தன் வயிற்றுக்குள் சுமந்து, வாழ்நாளெல்லாம் பாசத்தோடு அரவணைக்கும் அன்பின் திருவுரு அம்மா” “தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் நாள் வாழ்த்துகள்!” “ஈன்றவள் நம்மைச் சான்றோன் எனக் கேட்க வாழ்ந்து அன்னையரைப் போற்றுவோம்!” என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.