fbpx

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அதிரடி மாற்றம்..? டெல்லியில் முகாமிட்ட கே.எஸ்.அழகிரி..!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் விரைவில் மாற்றப்படலாம் என கூறப்படும் நிலையில், கே.எஸ்.அழகிரி டெல்லியில் முகாமிட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ். அழகிரி 2019 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அவரது தலைமையின் கீழ் நாடாளுமன்ற தேர்தலில் 8 இடங்களிலும், சட்டமன்ற தேர்தலில் 18 இடங்களிலும் அக்கட்சி வெற்றி பெற்றது. அவர் நியமிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில், புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

புதிய தலைவர் பதவிக்கு திருநாவுக்கரசர், செல்லக்குமார், ஜோதிமணி, விசுவநாதன், விஜயதரணி, சசிகாந்த் செந்தில் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், கே.எஸ்.அழகிரி கட்சி மேலிடத்தை சந்திப்பதற்காக டெல்லியில் முகாமிட்டுள்ளார். அவரின் பதவி நீட்டிக்கப்படுமா? அல்லது புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணிக் கட்சியான திமுகவுடன் இணக்கமாக செயல்படுபவரே புதிய தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றப்படலாம் என செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அழகிரியின் பதவிக்காலத்தை நீட்டிக்கப்படலாம் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Chella

Next Post

அதிரடியாக ரத்து செய்யப்பட்ட முக்கிய ரயில்கள்……! எந்தெந்த ரயில்கள் என பயணிகள் தெரிந்து கொள்ள வேண்டுமா……? அப்படி என்றால் இதை படியுங்கள்…..!

Mon Jun 26 , 2023
மக்கள் பெரும்பாலும் பேருந்து போக்குவரத்தை விடவும் ரயில் போக்குவரத்தை தான் அதிகம் விரும்புகிறார்கள். ஏனெனில் ரயில் போக்குவரத்து அதிக சிரமம் இருக்காது என மக்கள் கருதுகிறார்கள். மேலும் பயண கட்டணமும் மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. மேலும் நேரமிச்சமும் உண்டாகிறது. அதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அநேக சமயங்களில் வெகுதூர பயணத்திற்காக ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த வகையில், ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, தெற்கு […]

You May Like