சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் இன்று உயர்கல்வி நிறுவனங்கள் அதிகளவில் இருப்பதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சி தான். திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு, புதுமை பெண் திட்டம், பெண்களுக்கு பேருந்துகளில் இலவசம் போன்ற பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது. மத்திய கல்வி அமைச்சரிடம் எழுத்துப்பூர்வமான எதிர்ப்பை தமிழக அரசு பதிவு செய்துள்ளது.
விரைவில் மாநில கல்விக்கொள்கை வெளியிடப்படும். இருமொழிக் கொள்கை தான் தமிழகத்தில் அமலில் இருக்கும். 3, 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது, அப்படி பொதுத் தேர்வு கொண்டுவந்தால் இடைநிற்றல் அதிகரிக்கும். 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு இருந்தால் போதுமானது. முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.