fbpx

தமிழக அரசின் பொங்கல் பரிசு ரூ.1,000..!! டோக்கன்கள் விநியோகம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை வழங்கவும் ஆணை பிறப்பித்துள்ளார். பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை வரும் 2ஆம் தேதி சென்னையில் முதல்வரும், மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்களும் தொடங்கி வைப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைதாரர்கள் வரும் 2ஆம் தேதி முதல் பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ளலாம். இருப்பினும் அனைவருக்கும் இந்த பரிசுத் தொகை கிடைக்காது.

தமிழக அரசின் பொங்கல் பரிசு ரூ.1,000..!! டோக்கன்கள் விநியோகம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

பொங்கல் பரிசு யாருக்கு கிடைக்கும்?

பொங்கல் பரிசு ரூ.1,000 மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவை அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். சர்க்கரை அட்டை வைத்து உள்ளவர்களுக்கு இது கிடைக்காது. தமிழ்நாட்டில் மொத்தம் 5 வகையான ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், அதில் 3 வகையான கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கும். PHH, PHH-AAY, NPHH ஆகிய 3 வகையான அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கும். NPHH-S கார்டினை வைத்திருப்பவர்களுக்கு சர்க்கரை மட்டுமே கிடைக்கும். NPHH-NC  கார்டினை வைத்திருப்பவர்களுக்கு எந்த பொருளும் ரேஷன் கடைகளில் கிடைக்காது. இந்த இரண்டு வகையான ரேஷன் அட்டைகளை வைத்திருப்பவர்களுக்குப் பொங்கல் பரிசு எதுவும் கிடைக்காது.

எப்போது கிடைக்கும்?

ஒவ்வொரு ரேஷன் கடை பணியாளர்களும் நாள் ஒன்றுக்கு 100 முதல் 200 வரையிலான நபர்கள் பெறுவதற்கு ஏற்ப டோக்கன்களை விநியோகிப்பார்கள். ரேஷன் கடைகளில் வழக்கம் போல, கைரேகை வைத்தால் மட்டுமே பொங்கல் பரிசு கிடைக்கும். பொங்கல் பரிசுப் பொருட்களை பெறுவதற்கான டோக்கன்கள் வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் விநியோகிக்கப்பட உள்ளது. எனவே, மக்கள் அந்தந்த தேதிகளில் எந்தவித கூட்டமின்றி எளிதான முறையில் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, பனை வெல்லம் போன்றவை வழங்கலாமா ? என்று ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Chella

Next Post

நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் இது கட்டாயம்...! மத்திய அரசு அதிரடி உத்தரவு...!

Mon Dec 26 , 2022
நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் சோப்புகளைப் பயன்படுத்தி கைகளைக் கழுவும் வசதிகளை ஏற்படுத்தவும் மாணவர்களுக்குத் தூய்மைக் குறித்த கல்வியைக் கற்பிக்க ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்குமாறு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை, கல்வி அமைச்சகம், நீர்வள அமைச்சகம், நிதி ஆயோக், கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆகியவை கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து பள்ளிகளிலும், […]

You May Like