தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியின் பெயர் மற்றும் காலியிடம்: ஜீப் ஓட்டுநர் (3), அலுவலக உதவியாளர் – (10)
கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 8ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரவுக் காவலர் பதவிக்கு தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஜீப் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். வாகனங்களை ஓட்டியதற்கான முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்: ஜீப் ஓட்டுநர் பணிக்கு ரூ. 19,500 முதல் ரூ. 62,000 வரையும், அலுவலக உதவியாளர் பணிக்கு ரூ. 15,700 முதல் ரூ.50,000 வரையும் சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?: விண்ணப்பப் படிவத்தை நேரடியாக அலுவலங்களில் இருந்தும், தூத்துக்குடி மாவட்ட இணையதளமான thoothukudi.nic.in -இல் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு), இரண்டாம் தளம் – கோரம்பள்ளம், தூத்துக்குடி. 628 101, தொலைபேசி எண் – (0461 – 2340579) என்ற முகவரிக்கு எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.