fbpx

தமிழக பாஜகவுக்கு ஆபத்தா..? 4 பேர் கொண்ட டெல்லி குழு இன்று வருகை..!!

தமிழ்நாடு அரசு பாஜகவுக்கு எதிராக செயல்படுகிறதா என்று ஆய்வு செய்வதற்காக 4 பேர் கொண்ட குழு இன்று தமிழகம் வர உள்ளது.

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு நடப்பட்ட அவரது கட்சியின் கொடி கம்பத்தை காவல்துறை பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

அதே போல், கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு பாஜகவை வெறுப்புணர்வுடன் கையாள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் பாஜக தொண்டர்கள் மாநில அரசால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழுவை பாஜக தேசிய தலைவர் நட்டா அமைத்துள்ளார். அதன்படி சதானந்த கவுடா, சத்ய பால் சிங், புரந்தேஸ்வரி, பி.சி. மோகன் ஆகியோர் கொண்ட குழு இன்று தமிழ்நாடு வருகிறது.

தமிழ்நாடு அரசு பாஜகவுக்கு எதிராக செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வரும் இந்த குழு, நாளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லத்தில் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

இன்று வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல்..!! தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!!

Fri Oct 27 , 2023
தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (அக்டோபர் 27) வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக உரிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேர்தல் துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் அளிக்கலாம். இந்த விண்ணப்பப் படிவங்களை டிசம்பர் 9ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். இந்நிலையில், நவம்பர் 4, 5 மற்றும் […]

You May Like