fbpx

தமிழறிஞர் அவ்வை நடராஜன் மறைவு..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!!

சென்னையில் உடல்நலக் குறைவால் காலமான தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் அவ்வை நடராஜன். 87 வயதான இவர், அண்மைக் காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சென்னை செனாய் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.

தமிழறிஞர் அவ்வை நடராஜன் மறைவு..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!!

இதையடுத்து, அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில், பொதுமக்கள் இன்று அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவ்வை நடராஜன் உடலுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும், அவ்வை நடராசனின் மறைவுக்கு கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

வேறு சாதி வாலிபரை மணந்ததால் வெறிச்செயல்..!! சிவப்பு சூட்கேஸுக்குள் மகளின் உடல்..!! விசாரணையில் சிக்கிய தந்தை..!!

Tue Nov 22 , 2022
வேறு சாதி வாலிபரை மணந்ததால் இளம்பெண்ணை தந்தையே சுட்டுக்கொன்ற சம்பவம் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள யமுனை எக்ஸ்பிரஸ் சாலையில் கடந்த 18ஆம் தேதி சாலையில் கிடந்த சிவப்பு நிற சூட்கேசுக்குள் இளம்பெண் சடலம் இருந்தது. பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு இருந்த அந்த சடலத்தின் முகம், தலையில் காயங்கள் மற்றும் உடலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூட்கேசை மீட்ட போலீசார், […]
வேறு சாதி வாலிபரை மணந்ததால் வெறிச்செயல்..!! சிவப்பு சூட்கேஸுக்குள் மகளின் உடல்..!! விசாரணையில் சிக்கிய தந்தை..!!

You May Like