fbpx

தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிப்பு..!! ஒரு சவரன் தங்கப் பதக்கம், ரூ.2 லட்சம் ரொக்கம்..!!

தமிழ்நாடு அரசின் 2023ஆம் ஆண்டுக்கான விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளைக்‌ கொண்டு, சீரிளமையோடு இலங்கி வரும்‌ தமிழுக்கும்‌, தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு தொண்டாற்றிடும்‌ தமிழ்த்தாயின்‌ திருத்தொண்டர்களுக்குத்‌ தமிழால்‌ விளங்கிடும்‌ தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும்‌, சிறப்புக்களையும்‌ அளித்து தமிழ்த்தொண்டுக்குப்‌ பெருமை சேர்த்து வருகிறது.

அதன்படி,

◾️ திருவள்ளுவர் விருது – தவத்திரு பாலமுருகனடிமை சுவாமி

◾️ மகாகவி பாரதியார் விருது – கவிஞர் பழநிபாரதி

◾️ பேரறிஞர் அண்ணா விருது – பத்தமடை பரமசிவம்

◾️ பெருந்தலைவர் காமராசர் விருது – உ.பலராமன்

◾️ தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது – ஜெயசீல ஸ்டீபன்

◾️ பாவேந்தர் பாரதிதாசன் விருது – எழுச்சிக் கவிஞர் முத்தரசு

◾️ முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது – முனைவர் இரா.கருணாநிதி

விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.2 லட்சம் தொகை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

வங்கிக் கணக்கில் கூடுதல் பொங்கல் பரிசுத்தொகை..!! முதலமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

Fri Jan 12 , 2024
புதுச்சேரி மாநிலத்தில் சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 4ஆம் தேதி முதல் வங்கிக் கணக்கில் பொங்கல் பணம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பொங்கல் பரிசு பொருட்களுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.500 ஏற்கனவே வரவு வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக ரூ.250 வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.750 வரவு வைக்கப்படுகிறது. இந்த பரிசு தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் […]

You May Like