fbpx

தமிழ்நாடே அதிர்ச்சி..!! விஷ ஊசி போட்டு 300 பேரை கொன்ற ஊழியர்..!! வீடியோ வைரலானதால் வெளிவந்த உண்மை..!!

பள்ளிபாளையத்தில் கடந்த 15 ஆண்டுகளில் 300 முதியவர்களை விஷ ஊசி போட்டு கருணை கொலை செய்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை பிணவறையில், தற்காலிக உதவியாளராக வேலை செய்பவர் மோகன்ராஜ் (50). இவர் வயது முதிர்ந்து, படுத்த படுக்கையாய் உள்ளவர்களுக்கு பூச்சி மருந்து கொண்ட ஊசியை செலுத்தி, கருணை கொலை செய்வதாகவும், இதற்காக ரூ.5 ஆயிரம் வரை பணம் பெறுவதாகவும், கடந்த 15 வருடமாக இதுபோல் 300 பேரை விஷ ஊசி போட்டு கருணை கொலை செய்துள்ளதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதையறிந்த பள்ளிபாளையம் போலீசார், மோகன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் கூறுகையில், ”பணம் பெற்றுக்கொண்டு கருணை கொலை செய்வதாக, பிணவறை தற்காலிக ஊழியர் மோகன்ராஜ் மீது வலைதளங்களில் தகவல் பரவியது. இது தொடர்பாக சமூக ஆர்வலர் கொடுத்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதியவர்களை கருணை கொலை செய்தது உண்மையென தெரியவந்தால், அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார். இதுகுறித்து அங்கிருப்பவர்கள் கூறுகையில், ”கிராமப்புறங்களில் வயது முதிர்ந்து, படுத்த படுக்கையாய் உள்ளவர்களை கவனிக்க முடியாததால், அவர்களது குடும்பத்தினரே கருணைக் கொலை செய்யும் சம்பவங்கள் சத்தமில்லாமல் அரங்கேறி வருகிறது. கருணை கொலைக்கு 2 விதமான காரணங்கள் என்று கூறப்படுகிறது.

முதியவர்களின் மருத்துவ செலவுகளை மேற்கொள்ள முடியாததும், பராமரிப்பதற்கு உரிய ஆட்கள் இல்லாததும், இதற்கு காரணமாய் அமைகிறது. அந்திம காலத்தில் குடும்பத்தினரின் தூற்றலுக்கு ஆளாவதை தாங்கிக் கொள்ள முடியாமல், தங்களை கருணை கொலை செய்து விடுமாறு மன்றாடுபவர்களும் உள்ளனர். 2 மகன்கள் உள்ள குடும்பத்தில் படுத்த படுக்கையான தாய், தந்தையை யார் பராமரிப்பது? என்பதில் ஏற்படும் மனகசப்புகளும் இத்தகைய கருணை கொலைகளுக்கு வழி வகுக்கிறது. கருணை கொலை செய்ய அனுமதி கேட்டு ஏராளமான மனுக்கள் நீதிமன்றங்களில் உள்ளது. மோகன்ராஜ் போன்றோர் இதுபோன்ற கொலைகளுக்கு உடந்தையாகவோ அல்லது காரணமாகவோ உள்ளனர். இவர் மட்டுமின்றி ஏராளமான போலி மருத்துவர்களும், இதனை ஒரு தொழிலாகவே செய்து வருகின்றனர். இதனை போலீசார் முறையாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Chella

Next Post

சேப்பாக்கம் தான் எனக்கு பிடித்த மைதானம்!... ரசிகரின் கேள்விக்கு நச்சுனு தமிழில் பதிலளித்த சச்சின்!

Sat Apr 22 , 2023
மும்பைக்கு அடுத்து சென்னை சேப்பாக்கம் தான் எனக்கு பிடித்த மைதானம் என்று ட்விட்டரில் ரசிகரின் கேள்விக்கு சச்சின் டெண்டுல்கர் தமிழில் பதிலளித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது. அதைக்காண ரசிகர்கள் கூட்டம் அரங்கம் நிறைந்திருந்தது. இந்தநிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் #AskSachin என்ற ஹேஷ் டேக்கை பதிவிட்டு அதன்கீழ் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ட்விட்டரில் பதில் அளித்தார். அதில், இப்போது […]

You May Like