fbpx

’இன்னைக்கு 11 மாவட்டங்கள் தான் டார்கெட்’..!! இடி மின்னலுடன் வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை..!!

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால், பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் 18 மற்றும் 19ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

இடியாப்பத்தில் ஆரம்பித்த சண்டை..!! விவாகரத்து வரை சென்றதன் பின்னணி..!! கோர்ட் பிறப்பித்த உத்தரவு என்ன தெரியுமா..?

Tue Oct 17 , 2023
சென்னையை சேர்ந்தவர் வேணுகுமார். இவரது மனைவி வனிதா. இந்த தம்பதி இருவருக்குமே இது 2ஆம் திருமணம். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. வேணுகுமார் குடிப்பழக்கம் உள்ளவர். இவர், ஒருநாள் மனைவி வனிதாவிடம் இடியாப்பம் செய்து தரும்படி கேட்டுள்ளார். ஆனால், வீட்டில் இடியாப்ப குழல் இல்லை. இதனால், இடியாப்பம் செய்ய முடியாது என்று மனைவி கூறியுள்ளார். இதனால், தனது மனைவியிடம் சண்டையிட்டு அடித்து தாக்கியுள்ளார் வேணுகுமார். […]

You May Like