fbpx

மாணவர்களுக்கான சிக்கன் லெக் பீசை பதுக்கி வைத்து சாப்பிடும் ஆசிரியர்கள்..!! ஆத்திரத்தில் அறைக்குள் விட்டு பூட்டிய பெற்றோர்..!!

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் இங்கிலீஷ் பஜார் பகுதியில் அம்ரிதி காலனியில் முதன்மை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. அவற்றில், சிக்கன் கறியும் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், அவற்றில் உள்ள லெக் பீசை ஆசிரியர்கள் சிலர் எடுத்து தங்களுக்கு வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதன்பின் மீதமுள்ள சிக்கனின் கழுத்து, வயிறு உள்ளிட்ட பிற பகுதிகளை மாணவர்களுக்கு கொடுத்துள்ளனர். இதனை கவனித்த மாணவ, மாணவிகளில் சிலர் தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனால், கொந்தளித்த பெற்றோர்கள் மறுநாள், அந்த பள்ளிக்கு நேரில் சென்று ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் பின்னர், 6 ஆசிரியர்களை அறை ஒன்றிற்குள் தள்ளி பூட்டி வைத்தனர். ஏறக்குறைய 4 மணிநேரம் வரை அறைக்குள்ளேயே ஆசிரியர்கள் இருந்தனர். இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பெற்றோரை சமரசப்படுத்தி ஆசிரியர்களை விடுவித்தனர். மேற்கு வங்காளத்தில் கடந்த ஜனவரியில் இருந்து மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தில் சிக்கன் மற்றும் பழங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், ஊட்டச்சத்து பெற வழங்கப்படும் உணவு தானியங்களை ஆசிரியர்கள் சிலர் தவறாக பயன்படுத்தி கொள்கின்றனர் என்றும் உணவின் தரம் மோசமடைந்து உள்ளது என்றும் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.

Chella

Next Post

காதலில் விழுந்த மகன்..!! சாலையில் உருண்ட குடும்பம்..!! பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சி..!! பரபர சம்பவம்..!!

Sun Feb 19 , 2023
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பனங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவர் கட்டுமாவடி பகுதியில் ஆன்லைன் பார்சல் டெலிவரி செய்ய சென்று வந்தபோது கார்த்திகா என்ற பெண்ணுடன் காதல் மலர்ந்தது. கணவருடன் விவாகரத்தாகி 7 வயது மகனுடன் தனியாக வசித்து வந்த கார்த்திகாவுடன், 3 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய பரமேஸ்வரன் சென்னையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இருவரும் கட்டுமாவடிக்கு திரும்பிய நிலையில், இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த […]

You May Like