தொடக்கப்பள்ளி வகுப்புகளை ஒருங்கிணைத்து நடத்தக் கூடாது என ஆசிரியர்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் பாடத்திட்டம் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இதன் காரணமாக 1, 2 மற்றும் 3-ம் வகுப்புகளுடன் 4, 5-ம் வகுப்பு மாணவர்களை ஒருங்கிணைத்து பாடம் நடத்தக்கூடாது எனவும், ஈராசிரியர் பள்ளிகளில் 1, 2 மற்றும் 3-ம் வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியரும் 4,5-ம் வகுப்புகளுக்கு மற்றொரு ஆசிரியரும் பாடம் நடத்த வேண்டும்.
அதே போன்று 3 அல்லது 4 ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் தேவைக்கேற்ப வகுப்புகளை பிரித்து பாடங்களை நடத்த வேண்டும். மேலும் போதிய ஆசிரியர்கள் இருப்பின் தனித்தனி வகுப்புகளாக பிரித்து பாடம் நடத்தலாம். இந்த வழிகாட்டுதல்களை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.