fbpx

பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் மாரடைப்பால் மரணம்…..! திருமணமான ஒரே வருடத்தில் சோகம் அதிர்ச்சியில் ரசிகர்கள்……!

கடந்த 2011 ஆம் ஆண்டு சன் டிவியில் சின்னத்திரையின் வெற்றி இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் உருவான நெடுந்தொடர் தான் நாதஸ்வரம். இந்த தொடரில் அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இந்த தொடரில் சுருதி கதாநாயகியாக நடித்திருந்தார்.

அந்தத் தொடரில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த இயக்குனர் திருமுருகன், அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார். மேலும் அவருக்கு 4 தங்கைகள் இருப்பதால் அவர்களை படிக்க வைத்து திருமணம் செய்து வைக்கும் அனைத்து பொறுப்பும் இவர் தலை மேல் தான் இருக்கும்.

அத்துடன் அந்தத் தொடரில் கோபி கதாபாத்திரத்தின் தங்கைகளில் ஒருவராக சுருதி ஷண்முகப்பிரியா நடித்திருந்தார். இந்த தொடரின் மூலமாக மிகப் பெரிய பிரபலமாக அவர் மாறினார். ஆனால் இந்த தொடர் முடிவடைந்த பிறகு, குலதெய்வம், கல்யாண வீடு என்ற இரண்டு தொடர்கள் திருமுருகனால் இயக்கப்பட்டது. ஆனால் ரசிகர்கள் எதிர்பாராத விதத்தில், மிக விரைவிலேயே அந்த இரண்டு தொடர்களும் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் தான், ஸ்ருதி சண்முகப்பிரியாவுக்கும், அரவிந்த்சேகர் என்பவருக்கும் சென்ற வருடம் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு இயக்குனர் திருமுருகன் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த் சேகர் கடந்த 2022-ம் வருடத்திற்கான மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்றவர். உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை அரவிந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார் அவற்றிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த சூழ்நிலையில் தான், எதிர்பாராத விதமாக அரவிந்த் சேகர் இன்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு வருடமே ஆன நிலையில், அரவிந்த் சேகர் மரணமடைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Post

தொடர்ந்து எழுந்த புகார்……! தமிழக அரசு ரேஷன் கடைகளுக்கு வெளியிட்ட அதிரடி உத்தரவு……!

Thu Aug 3 , 2023
தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். ஆனால் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை ஒரு சில இடை தரகர்கள் பயனாளர்களுக்கு சரியான முறையில் சென்று சேராமல் தடுத்து விடுகிறார்கள் என புகார் ஆங்காங்கே வந்து கொண்டு தான் இருக்கிறது. அதனை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்ள […]

You May Like