fbpx

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு.. இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை..

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது…

எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை உறவினர்கள், நண்பர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கி ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த 2018ஆம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து, புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தலாம் என்றும் தேவைப்படும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யலாம் என்றும் கூறியிருந்தது.

இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சார்பிலும், லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதோடு நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கை விரைவாக விசாரிக்குமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முறையிடப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கை இன்று விசாரிப்பதாக கூறியிருந்தது.. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, ஆர்.எஸ். பாரதி தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது..

இந்நிலையில் இந்த வழக்கில் கூடுதல் மனு ஒன்றை ஆர்.எஸ். பாரதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.. சாலை ஒப்பந்தங்கள், திட்டங்களை தனது நெருங்கிய உறவினர்களுக்கு வழங்கியது உலக வங்கி வழிகாட்டுதல்களுக்கு முற்றிலும் எதிரானது என்று அந்த மனுவில் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்..

மேலும், எடப்பாடி பழனிசாமியின் இந்த செயலால், அரசு ஒப்பந்தங்களுக்கு அதிக விலை கொடுக்கப்பட்டதால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.. சாலை திட்டங்களுக்கான குறிப்பிட்ட ஒப்பந்தங்கள் எல்லாம், குறிப்பிட்ட நிறுவனங்களுக்காக கொடுக்கப்பட்டதாகவும் அது எடப்பாடி பழனிசாமியின் நெருக்கமானவர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் என்பதற்கான ஆதாரங்களையும் குறிப்பிட்டுள்ளார்.. மேலும் எடப்பாடி பழனிசாமியின் மேல் முறையீட்டு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது..

Maha

Next Post

பாதாம் வேண்டாம்.. இதை ஊறவைத்து சாப்பிட்டாலே போதும்.. பல நோய்களில் இருந்து பாதுகாக்கும்..

Wed Aug 3 , 2022
நம்மில் பலர் ஒவ்வொரு இரவும் பாதாம் பருப்பை ஊறவைத்து காலையில் சாப்பிடுவோம். ஏனென்றால் பாதாம் பல நன்மைகளைக் கொண்டிருப்பதால் அது நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. ஆனால் நீங்கள் எப்போதாவது பாதாமிற்கு பதில் வேர்க் கடலையை ஊறவைத்து சாப்பிட்டிருக்கிறீர்களா..? வேர்க் கடலையை ஊற வைத்து சாப்பிடும் போது, அதன்மூலம் பல நல்ல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது. பொட்டாசியம், தாமிரம், கால்சியம், இரும்பு மற்றும் செலினியம் போன்ற பண்புகள் நிறைந்த வேர்க்கடலையை ஊறவைப்பது […]
ஊறவைத்து

You May Like