fbpx

பயங்கர விபத்து..!! 9 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி..!! திருமணத்திற்கு சென்றபோது லாரி – வேன் மோதியதில் நிகழ்ந்த சோகம்..!!

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த 20 பேர், ஜலாலாபாத்தில் நடைபெறும் திருமணத்திற்காக வேனில் சென்று கொண்டிருந்தனர். அபோஒது, கொல்காமவுர் என்ற இடத்தில் வேன் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இந்த பயங்கர விபத்தில் வேனில் இருந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 11 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவருக்கும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான சிகிச்சை செலவை மாவட்ட நிர்வாகம் ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்ப இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்புப் பணியில் ஈடுபட்டு, இறந்தவர்களின் சடலங்களையும், படுகாயமடைந்தவர்களையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : விஷாலுக்கு மீண்டும் கை நடுக்கம்..!! இன்னும் மூன்றே மாதங்கள் தான்..!! அவருக்கு என்ன ஆச்சு..? அதிர்ச்சி தகவல்..!!

English Summary

Nine people in the van tragically died in this horrific accident. 11 people were seriously injured in the accident.

Chella

Next Post

”இனியும் உங்களைபோல் என்னால் சங்கியாக வாழ முடியாது”..!! நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன்..!!

Fri Jan 31 , 2025
Jagatheesa Pandian, the state coordinator of the Naam Tamilar Party, has announced his resignation from the party.

You May Like