fbpx

ஆவடி அருகே தின்னர் ஆலையில் பயங்கர தீவிபத்து..!! பள்ளிக்கும் பரவியதால் பரபரப்பு..!! அவசர அவசரமாக வெளியேறிய மாணவர்கள்..!!

சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயலில் தின்னர் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில், தற்போது பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையில் தீப்பற்றிய உடன் அருகில் உள்ள தனியார் பள்ளி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியில் இருந்த மாணவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

ஆலையில் ஏற்பட்டுள்ள பயங்கர தீவிபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து கொண்டுள்ளது. இதனால், மக்கள் பலரும் சுவாச கோளாறு, கண் எரிச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்புத்துறையினர், ஆலையில் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மின் கசிவு காரணமாக தீபத்து ஏற்பட்டதா..? அல்லது கவனக்குறைவால் ஏற்பட்டதா..? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : ’உங்களை நம்பி தான வந்தோம்’..!! கணவரை கட்டிப்போட்டு பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த வடமாநில இளைஞர்கள்..!!

English Summary

The entire area is shrouded in black smoke due to a massive fire at the factory.

Chella

Next Post

இந்த 6 எச்சரிக்கை அறிகுறிகள் இருக்கா..? அப்டின்னா உடலில் இந்த குறைபாடு இருக்கலாம்..

Thu Feb 20 , 2025
மெக்னீசியம் என்பது மனிதர்களுக்கு அவசியமான ஒரு நுண் ஊட்டச்சத்து ஆகும். அதாவது வைட்டமின்கள் மற்றும் துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற சில தாதுக்களைப் போலல்லாமல் இது உங்கள் உடலில் அதிக அளவில் காணப்படுகிறது, மேலும் உங்கள் உணவில் அதை தொடர்ந்து வழங்க வேண்டும் என்பதையும் இது குறிக்கிறது. உடலில் மெக்னீசியத்தின் இருப்பு, இதயம், தசைகள், நரம்புகள், எலும்புகள், நோய் எதிர்ப்பு சக்தி, இரத்த சர்க்கரை கட்டுப்பாடு, ஆற்றல் உற்பத்தி, மன […]

You May Like