fbpx

சென்னையில் பயங்கரம்..!! ரூ.3 கோடி கடன்..!! ராப் இசை கலைஞர் தேவ் ஆனந்த் கடத்தல்..!!

திருவேற்காடு அருகே ராப் இசை கலைஞர் தேவ் ஆனந்த், மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவேற்காடு அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மதுரையைச் சேர்ந்த ராப் இசை கலைஞர் தேவ் ஆனந்த் என்பவர் 10 பேர் கொண்ட கும்பலால் கத்திமுனையில் கடத்தப்பட்டுள்ளார். நுங்கம்பாக்கத்தில் இசை கச்சேரி முடிந்து திரும்பிய போது, அவரின் காரை வழிமறித்த மர்ம கும்பல் அவரை கடத்திச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், நிதி நிறுவனம் நடத்திய அவரது சகோதரர் ரூ.3 கோடி கடன் பெற்ற நிலையில், பணத்தை திரும்பச் செலுத்தாததால் இசை கலைஞர் தேவ் ஆனந்த் கடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கடத்தல் சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தேவ் ஆனந்தை கடத்திச் சென்ற மர்ம கும்பலை, தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Chella

Next Post

திண்டுக்கல் | வேடசந்தூர் அருகே…..! நெடுஞ்சாலையில் சிதைந்த நிலையில் கிடந்த பெண்ணின் உடல் காவல்துறையினர் தீவிர விசாரணை…..!

Thu Jun 22 , 2023
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இருக்கின்ற தம்மனம்பட்டி 4️ வழி சாலையில் நள்ளிரவில் பெண்ணின் உடல் மீது அடுத்தடுத்து வாகனங்கள் ஏறி சென்றதால் சிதைந்த நிலையில், அந்த உடல் கடப்பதாக ரோந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் வேடசந்தூர் காவல்துறையினருடன் பெண்ணின் உடல் கிடந்த பகுதிக்கு உடனடியாக சென்றனர். அந்த பெண்ணின் சேலை ஜாக்கெட் உள்ளிட்டவை மட்டுமே அடையாளமாக காணப்பட்டது. உடல் முழுவதும் இரவில் […]

You May Like