fbpx

பயங்கரம்!. தேவாலயங்கள், காவல் நிலையங்கள் மீது துப்பாக்கிச்சூடு!. 15 பேர் பலி!

Terrorist attack: முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ரஷ்யாவின் தெற்கு குடியரசின் தாகெஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதிரியார், போலீஸ்காரர்கள் உட்பட 15 பேர் பலியாகினர்.

ரஷ்யாவின் தெற்கு குடியரசின் தாகெஸ்தானில் உள்ள தேவாலயங்கள், காவல் நிலையங்கள் மீது ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின்போது தேவாலயம் தீப்பிடித்து எரிந்ததால் பலர் பலியாகினர். இதேபோல் காவல் நிலையம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் போலீஸ்காரர்கள் மற்றும் ஆர்த்தடாக்ஸ் பாதிரியார் உட்பட 15 பேர் கொல்லப்பட்டதாக கவர்னர் செர்ஜி மெலிகோவ் தெரிவித்துள்ளார்.

தாகெஸ்தான் தலைநகர் மகச்சலாவில் உள்ள ஒரு தேவாலயம் மற்றும் போக்குவரத்து காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிக்கைகள் வெளிவந்தன. மேலும் இந்த தாக்குதலில் 5 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம், புறநகர் மாஸ்கோவில் ஒரு கச்சேரி அரங்கில் ஒரு கூட்டத்தின் மீது துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 145 பேர் கொல்லப்பட்டனர். இஸ்லாமிய அரசு குழுவின் துணை அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது, ஆனால் ரஷ்ய அதிகாரிகள் எந்த ஆதாரமும் வழங்காமல் உக்ரைனை தாக்குதலுடன் தொடர்புபடுத்த முயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: இலவச வீடு!. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா!. இந்த திட்டத்திற்கு யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

English Summary

Russia: 15 killed as terrorists target multiple churches, police posts in Muslim-dominated Dagestan region

Kokila

Next Post

சாலை விபத்தில் சிக்கியோருக்கு ரத்த பரிசோதனை கட்டாயம்!! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

Mon Jun 24 , 2024
The Tamil Nadu government has ordered that the blood test should be conducted compulsorily if those who come for treatment after a road accident have consumed alcohol.

You May Like