fbpx

பள்ளிக்குள் அதிரடியாக நுழைந்த பயங்கரவாதிகள்..!! 41 மாணவர்கள் பலி..!! உச்சகட்ட பதற்றம்..!!

உகாண்டாவில் பள்ளி ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.

மேற்கு உகாண்டாவில் காங்கோ எல்லை அருகே உள்ள பள்ளி ஒன்றுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள், கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர். இவர்கள், ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் என்று கூறப்படுகிறது. அவர்கள் ஆண்கள் விடுதியை நோக்கி வெடிகுண்டுகளை வீசி தாக்கியுள்ளனர். பள்ளியில் இருந்து வெளியேற முற்பட்ட மாணவ மற்றும் மாணவிகள் மீதும் பயங்கரவாதிகள் கத்தியால் குத்தி கொடூர தாக்குதலை அரங்கேற்றினர். இந்த தாக்குதலில், தீயில் உடல் கருகி 20 பேரும், கத்திக்குத்தில் காயம் பட்டு 17 மாணவர்களும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், 4 ஊழியர்களும் இத்தாக்குதலில் உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து விரைந்த ராணுவம் மற்றும் காவல்துறையினர் பள்ளியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்த கொடூர தாக்குதலில் படுகாயம் அடைந்த சுமார் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், பல மாணவிகளை காணவில்லை என்று கூறப்படுகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பினர் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர். 37 மாணவர்கள் உட்பட 41 பேரின் உயிரை பறித்த இக்கொடூர தாக்குதல் உகாண்டாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்தில் வேலை வாய்ப்பு...! ரூ.23,000 மாத ஊதியம்...!

Sun Jun 18 , 2023
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Lead Consultant/ Advisor or Senior Consultant பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் பட்ட படிப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு 63 வயதிற்குள் இருக்க வேண்டும். […]

You May Like