fbpx

பிபிசி அலுவலகங்களில் 3-வது நாளாக தொடரும் சோதனை..!! சிக்கியது என்ன..? வெளியான பரபரப்பு தகவல்..!!

பிபிசியின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெறுகிறது.

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி ஊடக அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பிப்.14ஆம் தேதியன்று காலை 11.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இன்றும் 3-வது நாளாக தொடர்ந்து நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிபிசி அலுவலகத்தில் வருவாய் தொடர்பான ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம், வெளியிட்ட மோடி குறித்த ஆவணப்படம் தடை செய்யப்பட்ட நிலையில், சில இடங்களில் தடையை மீறி வெளியானதை அடுத்து தான் டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

Chella

Next Post

திரிபுராவில் ஆட்சியை பிடிப்பது யார்..? விறுவிறுப்புடன் வாக்களிக்கும் மக்கள்..!! பலத்த போலீஸ் பாதுகாப்பு..!!

Thu Feb 16 , 2023
திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடைபெறும் நிலையில், இதற்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. கம்யூனிஸ்ட்களின் கோட்டையாகக் கருதப்பட்ட திரிபுராவில் கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. 5 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவுக்கு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள பாஜகவும், ஆட்சியைக் கைப்பற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தீவிர முனைப்பில் இருந்து […]

You May Like