உத்தர பிரதேசத்தில் பல நோயாளிகளுக்கு பயன்படுத்திய ஒரே ஊசியை வைத்து மற்ற நோயாளிகளுக்கும் மருத்துவம் பார்த்ததால் சிறுமி ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ள் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் எட்டா மாவட்டத்தில் உள்ள ராணி அவந்தி பாய் லோதி அரசு மருத்துவக்கல்லூரியில் கடந்த மாதம் 20 ஆம் தேதி சிறுமி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த சிறுமிக்கு எச்.ஐ.வி தொற்று உள்ளதாக கூறி மருத்துவமனை ஊழியர்கள் அந்த சிறுமியையும் அவரது பெற்றோரையும் வலுக்கட்டாயமாக அங்கே இருந்து வெளியே தள்ளினர்.இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் நேற்று எட்டா மாவட்ட மாஜிஸ்திரேட் திரு. அங்கித் குமார் அகர்வாலிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், பல சிறுவர்களுக்கு பயன்படுத்திய ஊசியை தங்கள் மகளுக்கு அநத மருத்துவர் செலுத்தியதாகவும், அதன் விளைவாக தங்கள் மகளுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதாகவும் கூறினர். இந்த வழக்கை மாஜிஸ்திரேட் அவர்கள் தலைமை மருத்துவ அதிகாரி உமேஷ் குமார் திரிபாதி-யிடம் விரைந்து விசாரிக்குமாறு உத்தரவிட்டார். இதுதொடர்பாக உத்தர பிரதேஷ் துணை முதலமைச்சர் திரு. பிரஜேஷ் பதக், “இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.