fbpx

’அந்த ஜெயிலர் ஒரு சைக்கோ’..!! அடிக்கலனா தூக்கம் வராது..!! கடலூர் சிறை குறித்து சவுக்கு சங்கர் பகீர் தகவல்..!!

கடலூர் சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் குறித்து சக கைதிகள் கூறிய தகவல்களை சவுக்கு சங்கர் பகிர்ந்துள்ளார்.

”கடலூர் சிறையில் சராசரியாக 900 கைதிகள் உள்ளனர். இங்கு சிறைக் கண்காணிப்பாளராக செந்தில் குமார் உள்ளார். சிறைச்சாலையை பொறுத்தவரை சிறை கண்காணிப்பாளர் பதவிதான் சக்திவாய்ந்த பதவி. சிறையில் அனைத்துமே கண்காணிப்பாளரிடம் தொடங்கி அவருடனே முடிகிறது. செந்தில் குமார் மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆபீசராக தனக்கு கீழ் பணிபுரிபவர்கள் மத்தியில் காட்டி வருகிறார். ஒருமுறை கான்ஸ்டபிளிடம் கைதியை அழைக்கச் சொன்னபோது, அந்த கான்ஸ்டபிள் கைதியை “வாடா” என்று அழைத்தார். அப்போது, சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் கான்ஸ்டபிளை அழைத்து, ஒரு கைதியை இரக்கத்துடனும், மரியாதையுடனும் எப்படி நடத்த வேண்டும் என்று சுமார் 20 நிமிடங்கள் அறிவுரை சொல்லியுள்ளார். ஆனால், நிஜத்தில் செந்தில்குமார் அப்படி இல்லை.

’அந்த ஜெயிலர் ஒரு சைக்கோ’..!! அடிக்கலனா தூக்கம் வராது..!! கடலூர் சிறை குறித்து சவுக்கு சங்கர் பகீர் தகவல்..!!

செந்தில் குமார் கூடுதல் சிறை கண்காணிப்பாளராக திருச்சி சிறையில் இருந்த நாட்களில் கைதிகளை வெளுத்து வாங்குவார். இதுகுறித்து திருச்சி சிறையின் முன்னாள் கைதி ஒருவர் கூறுகையில், “அவர் ஒரு சைக்கோ சார். தினமும் சில கைதிகளை அடிக்கவில்லை என்றால் அவர் தூங்கவே மாட்டார். அவரை சைக்கோ செந்தில் என்றுதான் அழைப்போம். இந்தச் சிறையிலும் மனநோயாளியான நடத்தையைத் அவர் தொடர்கிறார்” என்று கூறியபோது, கடலூர் சிறைக்குள் நடக்கும் சம்பவங்களையும், செந்திலின் செயல்பாடுகளையும் தோண்டி எடுக்க ஆர்வத்தை ஏற்படுத்தியது. மேலும், அந்த தகவல் அதிர்ச்சியாக இருந்தது. சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷைத் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் செந்தில் குமாருக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டது. ஆனால், அவர் நடவடிக்கையை அது எந்த வகையிலும் தடுக்கவில்லை.

’அந்த ஜெயிலர் ஒரு சைக்கோ’..!! அடிக்கலனா தூக்கம் வராது..!! கடலூர் சிறை குறித்து சவுக்கு சங்கர் பகீர் தகவல்..!!

குப்பை கண்ணன் என்ற ஒரு சிறைவாசி செந்தில்குமாரை பற்றி சொன்னது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செந்தில் குமார் திருச்சி மத்திய சிறையில் கண்காணிப்பாளராக இருந்தபோது கைதி குப்பை கண்ணனுக்கும் செந்தில் குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இப்போது, மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்ட குப்பை கண்ணன், செந்தில் குமாரின் பிடியில் இருக்க கடலூர் சிறைக்கு அனுப்பட்டுள்ளார். ஒருநாள் சிறைக்குள் செல்போனுடன் சிக்கிய குப்பை கண்ணனை, மனநலம் குன்றிய கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் 8-வது பிளாக்கின் செல் ஒன்றில் தனிமையில் வைக்கப்பட்டார். தினமும் குளிப்பதற்கு 15 நிமிடங்கள் தவிர 24 மணி நேரமும் அந்த தனி சிறையிலேயே கண்ணன் அடைக்கப்பட்டிருந்தார்.

’அந்த ஜெயிலர் ஒரு சைக்கோ’..!! அடிக்கலனா தூக்கம் வராது..!! கடலூர் சிறை குறித்து சவுக்கு சங்கர் பகீர் தகவல்..!!

மற்ற கைதியோ அல்லது காவலாளியோ அவருடன் பேச அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவரை சந்திக்க குடும்பத்தினரோ வழக்கறிஞர்களோ வர முடியாது. அவரது தொலைபேசி வசதிகளும், கேன்டீன் வசதிகளும் துண்டிக்கப்பட்டன. எந்த கைதிக்கும் சட்டப்படி கொடுக்க வேண்டிய வசதிகளை சிறை நிர்வாகம் தடுக்க முடியாது. ஆனால், ஜெயிலர் செந்தில் குமார் சட்டத்தை பின்பற்றும் நபர் அல்ல. ஜெயிலர் செந்தில்குமார் சிறைக்கு வரும்போதெல்லாம், குப்பை கண்ணனின் பூட்டைத் திறந்து, குப்பை கண்ணனைத் தாக்குவதை வழக்கமாக வைத்துள்ளார். கண்ணனை மண்டியிட வைத்து, உள்ளங்காலில் லத்தியால் தாக்கப்பட்டுள்ளார்.

’அந்த ஜெயிலர் ஒரு சைக்கோ’..!! அடிக்கலனா தூக்கம் வராது..!! கடலூர் சிறை குறித்து சவுக்கு சங்கர் பகீர் தகவல்..!!

சுமார் ஒரு மாதத்திற்கு முன், சிவா என்ற ரிமாண்ட் கைதி, சிறை நடைமுறைகள் பற்றி தெரியாமல், தனது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள தொலைபேசி வசதி கேட்டுள்ளார். அப்போது செந்தில் குமார் சிவாவை தாக்கியதோடு ஒரு மாதம் தனிமையில் அடைத்தார்” என சவுக்கு சங்கர் தனது கடலூர் சிறை அனுபங்களை எழுதியுள்ளார்.

Chella

Next Post

#ராமநாதபுரம் : அலையில் மாயமான மாணவன்.. கரையொதிங்கிய சடலம்..!

Tue Nov 22 , 2022
ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் உள்ள மதுரை மன்னா் திருமலை நாயக்கா் கலைக் கல்லூரியில் எம்.எஸ்சி. பயிலும் 6 மாணவா்கள் சனிக்கிழமை அன்று அரியமான் கடல் அலையில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது இரு மாணவர்கள் அலையில் சிக்கிக் கொண்டனர்.இருவரும் உயிரிழந்த நிலையில், ஒரு மாணவரின் உடல் அப்போதே மீட்கப்பட்டது. மற்றொரு மாணவரின் உடல் இரு நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை அன்று கரை ஒதுங்கியுள்ளது.  அவர்கள் திருமங்கலத்தில் வசிக்கும் விக்னேஷ்வா், பறையடியில் வசிக்கும் […]

You May Like