fbpx

வீட்டில் கேட்ட அந்த சத்தம்..!! விசாரிக்க வந்த போலீசார்..!! விளாசிய ஜெயிலர் பட வில்லன்..!! கைதான சில மணி நேரத்தில் ஜாமீன்..!!

‘ஜெயிலர்’ பட வில்லன் விநாயகனை, மதுபோதையில் தகராறு செய்ததாக கூறி போலீசார் கைது செய்வது தொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில், கைதான சில மணி நேரத்திலேயே அவர் விடுவிக்கப்பட்டார்.

‘ஜெயிலர்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து, தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்தவர் மலையாள நடிகர் விநாயகன். கேரளாவைச் சேர்ந்த இவர், எர்ணாகுளத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது வீட்டில் இருந்து அதிகளவு சத்தம் வந்ததாக அக்கம்பக்கத்தினர் அவர் மீது போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, மதுபோதையில் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட விநாயகன், அங்குள்ள அதிகாரியை தாக்கி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், எர்ணாகுளம் வடக்கு காவல்துறையினர் விநாயகனை கைது செய்தனர். காவல் நிலையத்தின் வழக்கமான செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவித்ததால், அவரை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், விநாயகன் மதுபோதையில் இருந்ததை உறுதிப்படுத்த மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, போலீஸ் அதிகாரிகளிடம் தவறாக நடந்துகொண்டுள்ளார் விநாயகன். இதையடுத்து, கேரள போலீஸ் சட்டத்தின் ஜாமீன் பெறக்கூடிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இரவு 10.30 மணியளவில் விநாயகன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Chella

Next Post

அதிசயம்... இரண்டு கன்றுகளை பிரசவித்த பசு மாடு...! ஆச்சரியமாக பார்க்கும் பொதுமக்கள்.‌..!

Wed Oct 25 , 2023
கரூரில் பசு மாடு ஒன்று இரண்டு கன்றுகளை பிரசவித்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிக அரிதான நிகழ்வாக, ஒரே பிரசவத்தில் பசு மாடு இரண்டு கன்றுகளை ஈன்றுள்ளது. கரூர் மாவட்டம், வீரசிங்கம்பட்டி பகுதியை , சேர்ந்தவர் காளிதாஸ்; விவசாயியான இவர், தனது வீட்டில் பசு மாடு வளர்க்கிறார். சினையாக இருந்த மாடு கன்று ஈன்றது. நேற்று முன்தினம் இரண்டு கன்றுகளை பிரசவித்தது. இதில், இரண்டு காளை கன்றுகளை ஈன்றதாக […]

You May Like