fbpx

பாலியல் புகாரளித்த பெண்ணை வெட்டிக்கொன்ற சகோதரர்கள்..!! ஜாமீனில் வெளிவந்து வெறிச்செயல்..!!

ஜாமீனில் வெளியே வந்த அண்ணன் தம்பி சேர்ந்து, பாலியல் புகார் அளித்த பெண்ணை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கௌசம்பி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பவன் நிஷாத் என்பவர் பலாத்காரம் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதேபோல் இவரது சகோதரர் அசோக் என்பவரும் வேறொரு கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தனர்.

இதையடுத்து, அப்பெண்ணின் வீட்டிற்கு சென்ற பவன் மற்றும் அசோக், வழக்கை வாபஸ் பெறுமாறு பெண்ணை மிரட்டியுள்ளனர். ஆனால் இதற்கு அந்தப் பெண்ணும் குடும்பத்தினரும் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பவன் மற்றும் அசோக் ஆகியோர் புகார் அளித்த பெண்ணை சாலையில் வைத்து பட்டப்பகலில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர். இதையடுத்து இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இது குறித்த தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் இருவரும் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டத்தின் மீது குற்றவாளிகளுக்கு எவ்வித அச்சமும், மரியாதையும் இல்லாத சூழல் நிலவி வருவதாக குற்றம்சாட்டியுள்ளது. மேலும் உ.பி மாநில பெண்கள், தாங்கள் இழந்த மரியாதையை திரும்ப பெற முயன்றால் அதற்காக உயிரையும் இழக்க நேரிட வேண்டி இருப்பதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

Chella

Next Post

நேருவின் முதல் மனைவி காலமானார்..!! ஊரே ஒதுக்கி வைத்த கதை உங்களுக்கு தெரியுமா..?

Tue Nov 21 , 2023
ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, 1959ஆம் ஆண்டு டிசம்பரில் மேற்குவங்கம்-ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு இடைப்பட்ட தன்பாத் பகுதியில் பஞ்செட் அணை திறக்கப்பட்டது. இதனை பழங்குடியைச் சேர்ந்த ஒருவர் திறந்து வைக்க வேண்டும் என நினைத்த நேரு, அணை கட்டும் பணியில் ஈடுபட்ட 16 வயது சந்தால் பழங்குடியின பெண்ணான பத்னி மஞ்சியாயின் என்பவரை வைத்து அணையை திறந்து வைத்தார். அவரை பாராட்டும் விதமாக நேரு, பத்னிக்கு மலர் மாலை ஒன்றை அணிவித்துள்ளார். […]

You May Like